top of page

பத்தினி (அவள் - பகுதி 2)

என்னவள் எனை நிதம் எண்ணியவள்

என் மனம் அதை நெருங்கியவள்

தேன் என என்னுள் திகட்டியவள்

தினம் தாயென வழிபட வேண்டியவள்


ஒரு மாயையை தன்னுள் அடக்கியவள்

ஒரு வேள்வியை நாவில் ஏற்றியவள்

பல சூழ்நிலை அதை தாங்கியவள்

மண்ணில் வேதனை கொண்ட விதவை அவள்


பல இரவுகள் தனிமையில் வாடியவள்

சூழும் இருட்டினில் ஏற்றிய தீபம் அவள்

புது உலகினை படைத்திட ஏங்கியவள்

தன் படைப்பினில் புதுமையை தூவியவள்


கண்ணகியாம் அவள் பத்தினியாம்

கொடுங்கோவத்தில் தீயென்று உதித் தெழுந்தாள்

பாரினிடை புது புரட்சி எழ

தன் நாவினால் மாயையை சுட்டெரித்தாள்.


இக்கவிதையின் முதல் பாகத்தை வாசிக்க அவள் - பகுதி 1 ஐ அழுத்தவும்.


எழுதியவர் ராஜ்குமார் மொவீன். இவரை இங்கு தொடர்பு கொள்ளலாம்


Recent Posts

See All

Comments


© 2019 by Galle Road Blogs. All rights reserved

  • Facebook
  • Twitter
  • Instagram
bottom of page